Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மோசட்டை - நந்தப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம விவசாயிகள் கோரிக்கை

மோசட்டை - நந்தப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம விவசாயிகள் கோரிக்கை

மோசட்டை - நந்தப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம விவசாயிகள் கோரிக்கை

மோசட்டை - நந்தப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 15, 2024 05:39 AM


Google News
பெண்ணாடம்: மோசட்டை - நந்தப்பாடி இடையே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என இருபது கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெண்ணாடம் மற்றும் முருகன்குடி, துறையூர், நந்தப்பாடி, சத்தியவாடி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, கிளிமங்கலம், டி.வி.புத்துார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளாற்றங்கரையோரம் உள்ளது.

இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் போர்வெல் பாசனம் மூலம் நெல், கரும்பு, கேழ்வரகு மற்றும் வாழை, கத்தரி, கொத்தவரை, முருங்கை உள்ளிட்ட தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக போதிய மழையின்றி வெள்ளாற்றில் நீர்வரத்து குறைந்து போர்வெல் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இதனால் பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

எனவே, மோசட்டை - நந்தப்பாடி இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us