வாலிபர் மீது தாக்குதல்; இருவர் கைது
வாலிபர் மீது தாக்குதல்; இருவர் கைது
வாலிபர் மீது தாக்குதல்; இருவர் கைது
ADDED : ஜூலை 03, 2024 03:03 AM
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சஞ்சீவி, 24; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிதம்பரம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார்.
அப்போது அருகில் புகைப்பிடித்து கொண்டிருந்த சிதம்பரம் அண்ணாமலைநகர், கோவிந்தசாமி நகரை சேர்ந்த ராஜா மகன் கவுதம், 24; மண்ரோட்டை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ÿமன், 21; மற்றும் பிரகாஷ் ஆகியோரை, ஓரமாக சென்று புகை பிடிக்கும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும், சஞ்சீவியை பீர் பாட்டிலால் தாக்கினர்.
காயமடைந்த அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்து சஞ்சீவி அளித்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து கவுதம், ÿமன் இருவரையும் கைது செய்தனர். பிரகாஷை தேடி வருகின்றனர்.