/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதிய உணவில் பூரான்; 25 மாணவர்கள் மயக்கம் மதிய உணவில் பூரான்; 25 மாணவர்கள் மயக்கம்
மதிய உணவில் பூரான்; 25 மாணவர்கள் மயக்கம்
மதிய உணவில் பூரான்; 25 மாணவர்கள் மயக்கம்
மதிய உணவில் பூரான்; 25 மாணவர்கள் மயக்கம்
ADDED : ஜூலை 03, 2024 03:03 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகள் மயக்க மடைந்ததால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு நேற்று மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.
அதில் ஒரு மாணவியின் சாதத்தில் பூரான் இறந்து கிடந்ததை கண்டு ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரத்தில் உணவை சாப்பிட்ட சில மாணவி களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், மயக்கமடைந்த மாணவர்கள் இதழிகா, 5; கிருத்திகா, 7; பிரித்திவி, 8; ஆர்த்தி, 12; துளசிராஜன், 13; கமலி ஸ்ரீ, 5; சுனிதா, 6; அனுஷ்கா, 7; சுரேஷ்,7; உள்ளிட்ட 25 பேரை சிதம்பரம் அரசு மருத்தவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சைக்கு பின் அனைவரும் மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் வரகூர்பேட்டை கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.