Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

ADDED : ஜூன் 24, 2024 04:37 AM


Google News
விருத்தாசலம், : மங்கலம்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் காலனியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, 30. இவரது மனைவி ஷாலினி. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், ஷாலினி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

இருவரும் தற்போது, மங்கலம்பேட்டை முருகன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த நல்லதம்பி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

தகவலறிந்து சென்ற மங்கலம்பேட்டை போலீசார், அவரின் சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us