Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நெஞ்சுவலி ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

நெஞ்சுவலி ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

நெஞ்சுவலி ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

நெஞ்சுவலி ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

ADDED : ஜூன் 11, 2025 09:49 PM


Google News
தொண்டாமுத்தூ; இருட்டுபள்ளத்தில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், அணியாபரநல்லூரை சேர்ந்தவர் காளிசுந்தரம்,38. இவர், இருட்டுபள்ளத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி, ஈஷாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த, 9ம் தேதி, காளிசுந்தரம், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு இதய பிரச்னை இருப்பதாகவும், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், காளிசுந்தரம் சிகிச்சை பெறாமல், வேலைக்குச் சென்று விட்டார்.

10ம் தேதி இரவு, வீட்டில் உணவு உண்டு விட்டு தூங்க சென்றபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக, காளிசுந்தரத்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை காளி சுந்தரம் உயிரிழந்தார். இதுகுறித்து காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us