Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயிகளை தேடிச் செல்லும் மண் பரிசோதனை வாகனம்

விவசாயிகளை தேடிச் செல்லும் மண் பரிசோதனை வாகனம்

விவசாயிகளை தேடிச் செல்லும் மண் பரிசோதனை வாகனம்

விவசாயிகளை தேடிச் செல்லும் மண் பரிசோதனை வாகனம்

ADDED : மே 31, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
கோவை,; கோவை மாவட்ட வேளாண் துறை சார்பில், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனம், விவசாயிகளை கிராமத்துக்கே தேடிச் சென்று, மண் மாதிரிகளைப் பெற்று, ஒரே நாளில் பரிசோதித்து வழங்க உள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், நடப்பாண்டுக்கு 10 ஆயிரம் மண் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, எளிதில் அணுக முடியாத பகுதிகளுக்குச் சென்று, அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை செய்து கொள்ள வசதியாக, ரூ. 75 லட்சம் மதிப்பில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இவ்வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இவ்வாகனத்தில் மண் பரிசோதனைக்கான அனைத்து உபகரணங்களும் வசதிகளும் உள்ளன. விவசாயிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டு, வட்டால வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, கிராமங்களுக்கு நேரில் சென்று வாரத்துக்கு குறைந்தது மூன்று முகாம்கள் என, மாதம் 12 முகாம்கள் நடத்தப்படும்.

மண் பரிசோதனையில், பல்வேறு அளவுருக்கல், கரி கார்பன், பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துகள் ஆகியவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதே நாளில், அச்சிடப்பட்ட மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஒரு மண் மாதிரிக்கு ரூ.30 விவசாயிகளிடம் இருந்து கட்டணமாக பெறப்படும்.விவசாயிகளை நேரடியாகச் சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். துவக்க விழாவில், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us