/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரசாயன உரம் குறைப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி ரசாயன உரம் குறைப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி
ரசாயன உரம் குறைப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி
ரசாயன உரம் குறைப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி
ரசாயன உரம் குறைப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 14, 2025 11:18 PM
பெ.நா.பாளையம்; சோமையம்பாளையம் கிராமத்தில் ரசாயன உரம் குறைப்பு குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரம் மேலாண்மை, ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி காளப்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
வட்டார துணை வேளாண்மை அலுவலர் விஜய கோபால் தலைமை வகித்தார். கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா பங்கேற்று, ரசாயன உர பயன்பாட்டை குறைப்பது பற்றியும், வேளாண்மை துறை திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
இதில்,காரமடை அவினாசி லிங்கம் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுகந்தி, உதவி வேளாண் அலுவலர் சித்ரா, அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் மகேந்திரன் மற்றும் தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் சையது நுார் முகமது நன்றி கூறினார்.
கோவில்பாளையம் கள்ளிப்பாளையத்தில், விவசாயிகளுக்கு, ரசாயன உரம் பயன்பாட்டை குறைப்பது குறித்து உள் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா வரவேற்றார்.
வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி பேசுகையில், ''விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. வேளாண் பொறியியல் கருவிகள் பெற உழவன் செயலியில் பதிவிடலாம். ரசாயன உரத்தின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்,'' என்றார்.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் மாரியப்பன், வேளாண் அறிவியல் நிலைய சுரேஷ்குமார், வேளாண் துணை அலுவலர் வேலுச்சாமி, உதவி வேளாண் அலுவலர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.