Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

ADDED : ஜூன் 06, 2025 05:59 AM


Google News
கோவை; மாவட்ட அளவிலான 'ஓபன்' பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலியிறுதியில் அலீம், 11-7, 11-8 என்ற புள்ளிகளில் சேகரை வென்றார். தொடர்ந்து, நிஷ்சித், 11-4, 11-6 என்ற புள்ளிகளில் ராஜாவையும், தினேஷ் கிருஷ்ணா, 12-10, 11-9 என்ற புள்ளிகளில் செல்வத்தையும், சங்கர், 11-7, 11-9 என்ற புள்ளிகளில் பிரஜித்தையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

முதல் அரையிறுதியில் தினேஷ் கிருஷ்ணா, 8-11, 11-7, 11-5, 5-11, 11-9 என்ற புள்ளிகளில் நிஷ்சித்தையும், இரண்டாம் அரையிறுதியில் சங்கர், 11-7, 9-11, 11-8, 11-7 ஆகிய புள்ளிகளில் அலீமையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

பரபரப்பான இறுதிப்போட்டியில் சங்கர், 11-4, 11-2, 11-4 என்ற புள்ளிகளில் தினேஷ் கிருஷ்ணாவை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us