/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மனசையும் உடலையும் நேசிக்க கத்துக்கோங்க! ' 'மனசையும் உடலையும் நேசிக்க கத்துக்கோங்க! '
'மனசையும் உடலையும் நேசிக்க கத்துக்கோங்க! '
'மனசையும் உடலையும் நேசிக்க கத்துக்கோங்க! '
'மனசையும் உடலையும் நேசிக்க கத்துக்கோங்க! '
ADDED : ஜூன் 30, 2025 11:18 PM

மருத்துவர்களின் தினம் குறித்து வி.ஜி.எம்., மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறுகையில்: மறைந்த மாமேதை டாக்டர் பி.சி. ராயின் பிறந்த தினம் மற்றும் மறைவு தினம் ஆகிவற்றை குறிப்பது இந்த மருத்துவர் தினமாகும்.
இந்த நாள், என் போன்ற ஒரு மருத்துவருக்கு, நம்மை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்கும் மக்களை, நெஞ்சார நினைக்கும் தருணமாகும். மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல; அது ஒரு சேவை. மாத்திரைகள், மருந்துகள் என நாங்கள் செய்வது வெறும் சிகிச்சைகள் அல்ல. அவை உயிரை பாதுகாக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு. இந்த நன்னாளில், மக்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்' என்றார்.