Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

ADDED : ஜூன் 22, 2024 12:25 AM


Google News
கோவை:மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி, உலக யோகா தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மாணவர்கள் ஆசனங்கள் செய்தனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கூறுகையில், ''மாணவர்கள் யோகாசனம் செய்வது மூலம், அவர்களின்உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன உறுதியும், தன்னம்பிக்கையும் வளர்கிறது. தொடர்ந்து யோகாசனம் செய்தால், மன அமைதியும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us