/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு
நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு
நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு
நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு

குடிநீர் கட்டணம் உயர்வு
கோவை மாநகராட்சியோடு, 2011ல் இணைக்கப்பட்ட, விளாங்குறிச்சி, காளப்பட்டி, கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, குறிச்சி, குனியமுத்துார், துடியலுார், சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு ஆகிய உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பகுதிகளில் வசிப்போருக்கு, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.
8 வார்டுகள் புறக்கணிப்பு
தி.மு.க., மாமன்ற குழு தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், ''கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, குறைகளை சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது. தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் இருப்பதில்லை; 20 வாட்ஸ்க்கு குறைவாக இருக்கிறது. பொறியியல் பிரிவினரிடம் கூறினாலும் தீர்வு காண்பதில்லை,'' என்றார்.
'மாஜி' மேயர் 'ஆப்சென்ட்'
கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்துக்கு, மொத்தமுள்ள, 100 கவுன்சிலர்களில், 97 பேர் வந்திருந்தனர். முன்னாள் மேயரான, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, 9வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, 91வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் வரவில்லை. முன்னாள் மேயர் கல்பனாவுக்கு, கவுன்சிலர்கள் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.