Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பீகார் குழந்தைகள் கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது

பீகார் குழந்தைகள் கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது

பீகார் குழந்தைகள் கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது

பீகார் குழந்தைகள் கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது

ADDED : ஜூன் 11, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
சூலூர்;அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்த பீகாரை சேர்ந்த மகேஷ்குமார், அஞ்சலி தம்பதி, குழந்தைகளை வாங்கி விற்றது தெரிந்தது. கடந்த வாரம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு வயது ஆண் குழந்தை, ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து தனிப்படை நடத்திய விசாரணையில், பெண் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயனை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், குழந்தைகளை பீகாரில் இருந்து கடத்தி வந்தது, அஞ்சலியின் தாயான பூனம் தேவி, 53, சகோதரி மேகா குமாரி,21 ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பீகாரில் ஏழை பெண்ணிடம், ஆயிரத்து, 500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி வந்து, 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயனுக்கு விற்றது தெரிந்தது.

இவ்வழக்கில இதுவரை, ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us