/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய சட்டம் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் புதிய சட்டம் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய சட்டம் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய சட்டம் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
புதிய சட்டம் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 02:17 AM
கோவை;மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டத்தை கண்டித்து, கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி) -1860, 'பாரதிய நியாய சன்ஹிதா-2023' என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) -1973, 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023' என்றும், இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ) -1872, 'பாரதிய சாக்ஷயா அதீனியம்-2023' என்றும் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அகில இந்திய வக்கீல் சங்க, கோவை மாவட்ட குழு சார்பில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.