/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனமல்லாக் காடுகளுக்கு 'பிரமான்' சான்று அறிமுகம் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வனமல்லாக் காடுகளுக்கு 'பிரமான்' சான்று அறிமுகம் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வனமல்லாக் காடுகளுக்கு 'பிரமான்' சான்று அறிமுகம் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வனமல்லாக் காடுகளுக்கு 'பிரமான்' சான்று அறிமுகம் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வனமல்லாக் காடுகளுக்கு 'பிரமான்' சான்று அறிமுகம் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 09, 2024 11:28 PM

கோவை;இந்தியாவில் வனத்துக்கு வெளியே மரம் வளர்க்கும் (டி.ஓ.எப்.ஐ.,) திட்டத்தின் கீழ், இந்திய வனம் மற்றும் மரச் சான்று (பிரமான்) திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வனப் பணியாளர்கள், விவசாயிகள், தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரண்டு நாள் பயிலரங்கு, கோவை, மாநில வனப்பணிகளுக்கான மத்திய பயிற்சி நிறுவனத்தில், நேற்று துவங்கியது.
சர்வதேச வனவியல் ஆராய்ச்சி மற்றும் உலக வேளாண் காடுகள் மைய (சி.ஐ.எப்.ஓ.ஆர்.,) தலைவர் மனோஜ் தபாஸ், திட்டத்தை அறிமுகம் செய்தார்.
போபால், இந்திய வன மேலாண்மை நிறுவன இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வனம் அல்லாத பகுதிகளில், வேளாண் காடுகள், பண்ணைக்காடுகள் உள்ளிட்ட முறைகளில் விவசாயிகள் மரங்களை வளர்க்கின்றனர். இதற்குச் சான்றளிப்பதுதான் இந்திய வனம் மற்றும் மரச் சான்று.
சர்வதேச அளவில், எப்.எஸ்.சி., மற்றும் பி.இ.எப்.சி., ஆகிய இரு அமைப்புகள்தான், இதுபோன்ற சான்றை வழங்கி வந்தன. தற்போது தேசிய அளவில், இந்திய அரசு இதற்கான சான்று வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இத்திட்டத்தில், வனப்பணியாளர்கள், விவசாயிகள், தொழில்நிறுவனங்கள் என மூன்றுவிதமான சான்றுகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் வளர்க்கும் மரங்களை, சட்டப்பூர்வமாக சந்தைப்படுத்த இந்த சான்றுகள் உதவியாக இருக்கும்.
அதேபோன்று, காகிதம், தீக்குச்சி, பிளைவுட் உள்ளிட்ட மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் 'செயின் ஆப் கஸ்டடி' சான்று உதவியாக இருக்கும். வனப்பணியாளர்களுக்கும் இத்துறை சார்ந்த புரிதல் ஏற்படும்.
இந்த சான்றிதழ் பெறுவதற்கான அவசியம், பயன், எப்படி பெறுவது போன்ற தகவல்களை உள்ளடக்கிய இரண்டு நாள் பயிலரங்கு, நாடு முழுக்க 18 இடங்களில் நடத்தப்படுகிறது. வனம் அல்லாத நிலங்களில், மரப் பயிர்களை சாகுபடி செய்ய இத்திட்டம் ஊக்குவிப்பாக அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் பார்த்திபன் பேசுகையில், வேளாண் காடு வளர்ப்பின் தற்போதைய வாய்ப்புகள், எதிர்கால தேவைகள், தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டல் உள்ளிட்டவை பற்றி விரிவாக குறிப்பிட்டார்
போபால், இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் டீன் மன்மோகன் யாதவ், நீடித்த வன மேலாண்மை தரம் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
பயிலரங்கில், வனத்துறையினர், விவசாயிகள், தொழில்நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.