/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு
நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு
நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு
நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு

--நிருபர் குழு-
நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கோவை புறநகர் பகுதியில் நடந்த ஜமா பந்தியில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.
அன்னுார்
அன்னுார் அருகே அல்லப்பாளையம் விவசாயிகள், ஜமாபந்தியில் அளித்த மனுவில்,' அன்னூர் தாலுகாவில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தை வளப்படுத்துவதற்கு பவானிசாகர் நீர் தேக்கத்தை ஒட்டி கோவை மாவட்ட எல்லையில் வண்டல் மண் எடுக்க அனுமதி தராமல் தாமதிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கலெக்டர் அலுவலகப் பொது மேலாளர் மகேஷ் குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள், நான்கு கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சி, மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ளது. பருவ மழை காலங்களில் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குளம், குட்டைகளை நிறைக்கிறது. இதனால் நிலத்தடி நீர் பெருகி விவசாயம் செழிக்கிறது.
சூலுார்
சூலூர் தாலுகாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு ஜமா பந்தி துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கருமத்தம்பட்டி உள்வட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், 249 மனுக்களை அளித்தனர்.