/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்ஜெட் நகல் கிழித்து காங்., ஆர்ப்பாட்டம் பட்ஜெட் நகல் கிழித்து காங்., ஆர்ப்பாட்டம்
பட்ஜெட் நகல் கிழித்து காங்., ஆர்ப்பாட்டம்
பட்ஜெட் நகல் கிழித்து காங்., ஆர்ப்பாட்டம்
பட்ஜெட் நகல் கிழித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 01:20 AM
கோவை;மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில், கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காங்., செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து, பா.ஜ., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, கணபதி சிவகுமார், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காங்., தொண்டர்கள் பங்கேற்றனர்.