ADDED : ஜூலை 19, 2024 10:59 PM
கோவை;தொடர் மழையால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் நேற்று, 42.02 அடியாக அதிகரித்தது.
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின், மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. தற்போது, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்துவருவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம், 40.54 அடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 27 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில், 47 மி.மீ., மழையும் பதிவாகியது; நீர் மட்டமானது, 42.02 அடியாக உயர்ந்தது.
குடிநீர் தேவைக்காக, 9.4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.