Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு கலெக்டருக்கு 'வாரன்ட்'

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு கலெக்டருக்கு 'வாரன்ட்'

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு கலெக்டருக்கு 'வாரன்ட்'

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு கலெக்டருக்கு 'வாரன்ட்'

ADDED : மார் 23, 2025 12:22 AM


Google News
சென்னை,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத, செங்கல்பட்டு கலெக்டருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம், 'வாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர், கடந்த 2001ல் மரணம் அடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி, முனுசாமியின் மகன் ராஜகிரி விண்ணப்பித்தார்.

ஆனால், மூன்று ஆண்டு காலதாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, 2022ல் ராஜகிரியின் விண்ணப்பத்தை நிராகரித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து, ராஜகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என, கடந்த 2023ம் ஆண்டு டிச., 19ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, கடந்த 2024ம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் ராஜகிரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.பி.சுடலையாண்டி, கே.சத்யகுமார் ஆஜராகினர்.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.அருண்ராஜை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, சட்டப்பூர்வ 'நோட்டீஸ்' பிறப்பித்தார். இந்த வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு எதிராக ஜாமினில் வெளிவரக் கூடிய 'வாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், விசாரணையை ஏப்., 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us