Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சேலையூரில் கோவில் உண்டியல் திருட்டு

சேலையூரில் கோவில் உண்டியல் திருட்டு

சேலையூரில் கோவில் உண்டியல் திருட்டு

சேலையூரில் கோவில் உண்டியல் திருட்டு

ADDED : ஜூன் 12, 2025 12:12 AM


Google News
சேலையூர், தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில், பிரசித்திபெற்ற செங்கோதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

நள்ளிரவு, கோவிலின் கேட்டை லாவகமாக திறந்த மர்ம நபர்கள், நுழைவாயில் முன் இருந்த உண்டியலை திருடி சென்றனர். பின், உண்டியல் பூட்டை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிய மர்ம நபர்கள், 2 கி.மீ., துாரத்தில் உண்டியலை சாலையில் வீசிவிட்டு சென்றனர்.

நேற்று காலை, தகவலறிந்த போலீசார், சாலையில் வீசப்பட்ட உண்டியலை மீட்டனர். இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, திருடர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us