ADDED : ஜூன் 13, 2025 12:26 AM
ஆவடி, அக்னி நட்சத்திரம் முடிந்தும், கோடை வெயில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் உச்சத்தை தொட்டு, அனல் காற்று வீசியது.
இந்த நிலையில், நேற்று மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை, ஆவடி, திருவேற்காடு, திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதியில் திடீர் மழை பெய்தது.
இதனால், வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.