Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பயணி தவற விட்ட செயின் மீட்பு

 பயணி தவற விட்ட செயின் மீட்பு

 பயணி தவற விட்ட செயின் மீட்பு

 பயணி தவற விட்ட செயின் மீட்பு

ADDED : டிச 01, 2025 01:16 AM


Google News
சென்னை: ரயிலில், பயணி தவற விட்ட செயின் மீட்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், பொன்மலை நியூ டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 46. இவர், திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.

சென்னை வந்து இறங்கியதும், தன் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்செயினை காணவில்லை என, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் தேடினர்.

அப்போது, அந்த பெட்டியின் கழிப்பறை அருகே செயின் கண்டெடுக்கப்பட்டது. அதை, சிவகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

பெரம்பூரைச் சேர்ந்தவர் மூவேந்தன், 36. செம்பியம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் இவர், நேற்று மதியம், அம்பேத்கர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

சாலையில் கிடந்த தங்க செயினை கண்டெடுத்த அவர், காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். செயின் தவறிவிட்டவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us