Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உதவி பொறியாளருக்கு 'பளார்' தி.மு.க., வட்ட செயலர் மீது வழக்கு

 உதவி பொறியாளருக்கு 'பளார்' தி.மு.க., வட்ட செயலர் மீது வழக்கு

 உதவி பொறியாளருக்கு 'பளார்' தி.மு.க., வட்ட செயலர் மீது வழக்கு

 உதவி பொறியாளருக்கு 'பளார்' தி.மு.க., வட்ட செயலர் மீது வழக்கு

ADDED : டிச 01, 2025 01:15 AM


Google News
காசிமேடு: அடுக்குமாடி குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவி பொறியாளருக்கு 'பளார்' விட்ட, தி.மு.க., வட்ட செயலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொளத்துார், திருமலை நகர், மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த், 31; தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில், மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம், 520 வீடுகள் அடங்கிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

பணியிடத்திற்கு வந்த, ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க., 39வது வார்டு வட்ட செயலர் கஜேந்திரன், பணியை நிறுத்தும்படி உதவி பொறியாளர் அரவிந்திடம் தகராறு செய்துள்ளார்.

காரணம் கேட்டதற்கு, 'குடியிருப்பின் பின்புறம் வீடுகள் உள்ளன. தவிர ஒரு பெண், பெட்டி கடையும் நடத்தி வருகிறார். சுற்றுச்சுவரால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என, கஜேந்திரன் தெரிவித்ததாக கூறப் படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த தி.மு.க., பிரமுகர் கஜேந்திரன், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, உதவி பொறியாளர் அரவிந்தை கன்னத்தில் அறைந்தார்.

இதுகுறித்து அவர், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் அளித்ததை அடுத்து, கஜேந்திரன் மீது போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us