அடையாறில் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
அடையாறில் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
அடையாறில் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 27, 2025 12:20 AM

அடையாறு, சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம், அடையாறில் உள்ளது. இங்கு, பணிந்த துணை கமிஷனர் அமித், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கூடுதல் கலெக்டராக பணி புரிந்து வந்த அதாப் ரசூல், தெற்கு வட்டார துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அடையாறில் உள்ள அலுவலகத்தில், அதாப் ரசூல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு, தமிழ்நாடு வக்ப் வாரிய தலைமை செயல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த பொறுப்பையும் அவர் நேற்று ஏற்றுக்கொண்டார்.