ADDED : ஜூன் 18, 2025 12:32 AM
ராயப்பேட்டை, ராயப்பேட்டை, பி.வி., கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, ராயப்பேட்டை போலீசார் அந்த கடையில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அப்போது, ஹான்ஸ் உள்ளிட்ட 15 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் தீனதயாளன், 45, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.