ADDED : ஜூன் 13, 2025 12:23 AM
படப்பை, படப்பை, ஆதனஞ்சேரி, கலைஞர் நகரில் உள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மணிமங்கலம் போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 13 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் கனகராஜ், 49, என்பவர் கைது செய்யப்பட்டார்.