ADDED : ஜூன் 21, 2024 12:33 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி தனிப்படை போலீசார், சுந்தரம் நகர், முதலாவது தெரு ரயில்வே டிராக் அருகே, நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற பெண்ணை அழைத்து விசாரித்து. சோதனையிட்டனர்.
இதில், அவரிடமிருந்து 29 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அப்பெண், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லரான அமுதா, 26, என தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.