Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மகனின் அழுகிய உடலுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தாய் மீட்பு

மகனின் அழுகிய உடலுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தாய் மீட்பு

மகனின் அழுகிய உடலுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தாய் மீட்பு

மகனின் அழுகிய உடலுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தாய் மீட்பு

ADDED : ஜூலை 30, 2024 01:02 AM


Google News
பல்லாவரம், பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, தனியாருக்குச் சொந்தமான பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

நேற்று முன்தினம், அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அக்கம் பக்கத்தினர் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தனர். கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே சென்ற போது, இறந்து உடல் அழுகிய நிலையில், வாலிபர் ஒருவர் படுக்கை அறையில் கிடந்துள்ளார்.

அவர் இறந்து, மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிந்தது. இது எதுவும் தெரியாதது போல், மற்றொரு அறையில் அவரது தாய் நடமாடிக் கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரித்ததில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். இதையடுத்து, அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர் விசாரணையில், இறந்த நபர் விஷ்ணு, 23, என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது அவரது தாய் உமா, 45, என்பதும் தெரிந்தது.

விஷ்ணுவின் தந்தை பட்சிராயன், 48, பூடான் நாட்டில் வேலை செய்து வருகிறார். இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us