Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி உணவில் பல்லி 2 மாணவியருக்கு பாதிப்பு

பள்ளி உணவில் பல்லி 2 மாணவியருக்கு பாதிப்பு

பள்ளி உணவில் பல்லி 2 மாணவியருக்கு பாதிப்பு

பள்ளி உணவில் பல்லி 2 மாணவியருக்கு பாதிப்பு

ADDED : ஜூன் 26, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 73 மாணவர்கள், 80 மாணவியர் என, மொத்தம் 153 பேர் படித்து வருகின்றனர்.

நேற்று, பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவ - மாணவியருக்கு கோதுமை கிச்சடி மற்றும் முள்ளங்கி சாம்பார் வழங்கப்பட்டது. இதை, 40 பேர் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டுக் கொண்டு இருந்த போதே, ஆறாம் வகுப்பு மாணவியர் ரோஷினி, 11, மற்றும் லக் ஷனா, 11, இருவரும், உணவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, வாந்தி எடுத்துள்ளனர்.

அதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்ததையடுத்து, மாணவ - மாணவியர் சாப்பிடுவதை நிறுத்தி, அவர்களிடம் இருந்த உணவு வாங்கப்பட்டது. பின், வாந்தி எடுத்த இரண்டு மாணவியரும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்து, மருத்துவமனைக்கு வந்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் மற்றும் செய்யூர் வட்டாட்சியர் சரவணன், சிகிச்சை பெற்று வந்த மாணவியரிடம் நலம் விசாரித்தனர்.

பின், பொலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சாப்பாடு செய்யும் இடத்தை சோதனையிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us