ADDED : ஜூன் 26, 2024 12:20 AM

சூணாம்பேடு, புதுச்சேரி மாநிலம், நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 35. இவர், புதுச்சேரி மாநிலத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார்.
நேற்று மாலை, தன் நண்பர் சாமுவேல் மற்றும் இரண்டு பேருடன், சொந்த வேலை காரணமாக, சென்னை சென்று 'இனோவா' காரில் திரும்பினர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றபோது, சூணாம்பேடு அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி, கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டிச் சென்ற போலீஸ்காரர் செல்வம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.