Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 7ம் தேதி இ.சி.ஆரில் ஜெகன்நாதர் ரத யாத்திரை

7ம் தேதி இ.சி.ஆரில் ஜெகன்நாதர் ரத யாத்திரை

7ம் தேதி இ.சி.ஆரில் ஜெகன்நாதர் ரத யாத்திரை

7ம் தேதி இ.சி.ஆரில் ஜெகன்நாதர் ரத யாத்திரை

ADDED : ஜூலை 03, 2024 12:12 AM


Google News
சென்னை, ஒடிசா மாநிலத்தில் புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது புரி ஜெகன்நாதர் கோவில். இக்கோவிலின் உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர், ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

அதேபோல, 'இஸ்கான்' என அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ஆண்டுதோறும் சென்னையில் ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்தி வருகிறது.

இந்தாண்டு, 44வது ஜெகன்நாதர் ரத யாத்திரையாக, வரும் 7ம் தேதி மாலை 2:00 மணிக்கு, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் இருந்து துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், பக்தி வினோத சுவாமி மகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

அங்கிருந்து நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை வழியாக இஸ்கான் கோவிலை, மாலை 6:00 மணிக்கு ரதம் வந்தடைகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us