ADDED : ஜூன் 24, 2024 02:05 AM
ஓட்டேரி:ஓட்டேரி பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், டிரைவர் சீட்டிற்கு கீழே, பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா சிக்கியது.
விசாரணையில், கொசப்பேட்டை, தேவராஜ் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 21, என்பவர், புளியந்தோப்பு, கே.பி.பார்க்கில் இருந்து, 25,000 ரூபாய்க்கு வாங்கி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.