ADDED : ஜூன் 13, 2024 12:29 AM

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரத்தில் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த, 1,200 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது; ரோபோடிக் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.