Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 1 டன் குட்கா பறிமுதல்

1 டன் குட்கா பறிமுதல்

1 டன் குட்கா பறிமுதல்

1 டன் குட்கா பறிமுதல்

ADDED : ஜூன் 13, 2024 12:30 AM


Google News
பூந்தமல்லி, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், வண்டலுார்- மீஞ்சூர் வெளிவட்ட அணுகு சாலையில், போக்குவரத்து போலீசார், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ய மடக்கினர். போலீசாரை கண்டதும், வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போலீசார், விரட்டி சென்று மடக்கினர். வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

வாகனத்தை திறந்து சோதனை செய்தபோது, அதில், 1 டன் குட்கா இருப்பது தெரியவந்தது. குட்காவை கடத்திய நபர்கள் குறித்து, நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us