ADDED : ஜூலை 19, 2024 05:34 PM

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள், ஐந்து மண்டலங்கள் உள்ளன. இம்மாநகராட்சி கமிஷனராக இருந்த அழகுமீனா, கன்னியாக்குமரி கலெக்டராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில், சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலசந்தர் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இம்மாநகராட்சியில் குப்பை, சாலை, தெரு நாய், கழிவுநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. இப்பிரச்னைகளுக்கு, புதிய கமிஷனர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.