/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம் விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம்
விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம்
விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம்
விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம்
ADDED : ஜூன் 23, 2024 01:05 AM
சென்னை:நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் சரவணன், சென்னை, இ.சி.ஆர்., நீலாங்கரையில் விழா ஏற்பாடு செய்தார்.
விழாவை ஒட்டி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ராஜன் என்பவரின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மயிலாப்பூரைச் சேர்ந்த கிரீஷ்வா, 11, என்ற சிறுவன் ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அடுக்கி வைத்த ஓடுகளை உடைக்கும் முன்னதாக, அதில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. அதை, சிறுவன் உடைத்த போது, கையில் ஊற்றப்பட்ட பெட்ரோலில் தீ பிடித்தது.
ராஜன் தடுக்க முயன்றபோது, அவர் வைத்திருந்த கேனில் இருந்து பெட்ரோல் சிந்தியதில், அவர் கையிலும் தீப்பிடித்தது. நீலாங்கரை போலீசார் கூறியதாவது:
தீ வைத்து சாகசம் நிகழ்ச்சி நடத்த காவல் துறை, தீயணைப்பு துறை அனுமதி பெற வேண்டும். சாகச நிகழ்ச்சி நடத்திய சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.