ADDED : ஜூலை 20, 2024 01:46 AM

சேப்பாக்கம்:பசுமை தீர்ப்பாயம் வளாகத்தில் மரம் விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்தன.
சென்னை, சேப்பாக்கத்தில், பசுமை தீர்ப்பாயம் அலுவலகம் உள்ளது. நேற்று, இந்த அலுவலக வளாகத்தில் இருந்த துாங்குமூஞ்சு மரம், திடீரென சாய்ந்தது.
இதில், மரத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.