ADDED : ஜூன் 29, 2025 10:27 PM
மறைமலை நகர்:வீடு பூட்டை உடைத்து, 5,000 ரூபாய் திருடியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மறைமலை நகர் அடுத்த நின்னகரை அன்னை மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் புனிதா, 40.
கடந்த 26ம் தேதி, காட்டாங்கொளத்துாரில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றார்.
நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே, அலமாரியில் இருந்த 5,000 ரூபாய் பணத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.