Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துாங்கியவரை தாக்கியோர் கைது

துாங்கியவரை தாக்கியோர் கைது

துாங்கியவரை தாக்கியோர் கைது

துாங்கியவரை தாக்கியோர் கைது

ADDED : ஜூன் 29, 2025 10:28 PM


Google News
மறைமலை நகர்:போதையில் துாங்கியவரை தாக்கியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 41. மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில், தன் வீட்டின் வெளியே படுத்து துாங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை 4:30 மணியளவில், அங்கு வந்த மர்ம நபர்கள், ராஜேஷை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

அக்கம்பக்கத்தினர் ராஜேஷை மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us