Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வீரபோகம் ஊராட்சிக்கு ரூ.14.31 லட்சத்தில் புது அங்கன்வாடி

வீரபோகம் ஊராட்சிக்கு ரூ.14.31 லட்சத்தில் புது அங்கன்வாடி

வீரபோகம் ஊராட்சிக்கு ரூ.14.31 லட்சத்தில் புது அங்கன்வாடி

வீரபோகம் ஊராட்சிக்கு ரூ.14.31 லட்சத்தில் புது அங்கன்வாடி

ADDED : ஜூன் 29, 2025 10:27 PM


Google News
பவுஞ்சூர்:வீரபோகம் ஊராட்சியில், 14.31 லட்சம் ரூபாய் செலவில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.

பவுஞ்சூர் அருகே உள்ள வீரபோகம் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கூர் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 13 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு, ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், தனியார் கட்டடத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

தனியார் கட்டடத்தில் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வந்த நிலையில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 2023 - 24 கனிம வள நிதியின் கீழ், 14.31 லட்சம் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, தற்போது புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us