Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க கோரிக்கை

ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க கோரிக்கை

ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க கோரிக்கை

ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க கோரிக்கை

ADDED : மே 24, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்,:மதுராந்தகம் அருகே பாக்கம் ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.

ஏரிக்கரையின் மீது உள்ள மண் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏரிக்கரையின் மீது மண்சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக, தார் சாலை அமைத்து தரக்கோரி, பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து, தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us