/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கேளம்பாக்கத்தில் வரும் 13ல் மனு நீதிநாள் கேளம்பாக்கத்தில் வரும் 13ல் மனு நீதிநாள்
கேளம்பாக்கத்தில் வரும் 13ல் மனு நீதிநாள்
கேளம்பாக்கத்தில் வரும் 13ல் மனு நீதிநாள்
கேளம்பாக்கத்தில் வரும் 13ல் மனு நீதிநாள்
ADDED : ஜூன் 11, 2025 10:17 PM
செங்கல்பட்டு:கேளம்பாக்கத்தில் மனு நீதிநாள் முகாம், வரும் 13ம் தேதி நடக்கிறது.
அரசு நடத்தும் மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில், இம்மாதத்திற்கான மனு நீதிநாள் முகாம், கேளம்பாக்கம் குறுவட்டம், கேளம்பாக்கம் கிராமத்தில், வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.
பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.