Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

ADDED : ஜூன் 16, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பா.ம.க., வழக்கறிஞர் சக்ரவர்த்தி என்பவர் கடந்த 11ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

மதுராந்தகம் -- செங்கல்பட்டு சாலையில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பொது வாழ்வில் இருக்கும் வழக்கறிஞர்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us