Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சட்டமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சட்டமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சட்டமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சட்டமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ADDED : ஜூன் 06, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
மறைமலைநகர்'மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது.

இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்த சாலை சட்டமங்கலம் பகுதியில் சேதமடைந்து, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களின் டயர்களில் குத்தி அடிக்கடி 'பஞ்சர்' ஏற்பட்டுவதால், பேருந்து வசதி இல்லாத இந்த சாலையை பயன்படுத்தும் இப்பகுதி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, இந்த பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us