Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

ADDED : செப் 10, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர்:ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும், என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சித்தாமூர் அடுத்த ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்நிலையில் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து சிமென்ட் கலவைகள் உதிர்ந்து உள்ளது. பலத்த காற்று வீசினால் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

முன்னெச்சரிக்கையாக தொட்டி இடிந்து விழும் முன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us