/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு
செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு
செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு
செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், ஜமாபந்தி இன்று துவங்குகிறது. இதில், செங்கல்பட்டு குறுவட்டத்தைச் சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
வண்டலுார்
வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில், வண்டலுார் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி இன்று துவங்குகிறது. கூடுவாஞ்சேரி குறுவட்டத்திற்கு 13ம் தேதியும், மாம்பாக்கம் குறுவட்டத்திற்கு 14ம் தேதியும் நடக்கிறது.
திருப்போரூர்
திருப்போரூர் தாலுகா, திருப்போரூர், நெல்லிக்குப்பம் குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி, சப் -- கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், இன்று துவங்குகிறது.
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் தாலுகா, மாமல்லபுரம் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, செங்கல்பட்டு கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு தலைமையில், இன்று துவங்குகிறது. நாளையும் தொடர்கிறது.
மதுராந்தகம்
மதுராந்தகம் தாலுகா, ஒரத்தி, அச்சிறுபாக்கம் குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமையில், இன்று துவங்குகிறது.
செய்யூர்
செய்யூர் தாலுகா, சித்தாமூர் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமையில், இன்று துவங்கி, நாளை வரை நடக்கிறது.
தாம்பரம்
தாம்பரம் தாலுகா, தாம்பரம், சிட்லபாக்கம் குறுவட்டங்களுக்கு, செங்கல்பட்டு தனித்துணை ஆட்சியர் ஜோதிசங்கர் தலைமையில், இன்று ஜமாபந்தி துவங்குகிறது.
பல்லாவரம்
பல்லாவரம் தாலுகா, பல்லாவரம் குறுவட்டத்திற்கு, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ்பாபு தலைமையில், இன்று ஜமாபந்தி துவங்குகிறது. பம்மல் குறுவட்டத்திற்கு, நாளை ஜமாபந்தி நடக்கிறது.