Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கைதி தற்கொலை முயற்சி

கைதி தற்கொலை முயற்சி

கைதி தற்கொலை முயற்சி

கைதி தற்கொலை முயற்சி

ADDED : ஜூலை 16, 2024 04:30 AM


Google News
புழல் : புழல் சிறையில் விசாரணை கைதியாக, தண்டையார்பேட்டை, நாவலர் குடியிருப்பைச் சேர்ந்த 'கருப்பு' மணி, 28, என்பவர், கொலை முயற்சி வழக்கில், கடந்த மே 5ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மணியின் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக, சிறையில் மனு கொடுத்து பார்க்க வந்த உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி, சிறையில் இருந்த பெயின்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கி விழுந்த அவரை, போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us