ADDED : ஜூலை 16, 2024 04:30 AM

சேதமான வழிகாட்டி பலகை
சீரமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அடுத்த வேட்டூர் கிராமத்தில், சாலையூர் செல்லும் சாலையில், நீர்பெயர் மற்றும் வேட்டூர் கிராமத்திற்கு செல்லும் சந்திப்பு உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை சந்திப்பு அருகே வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டு இருந்தது.
வழிகாட்டிப் பலகை தற்போது சேதமடைந்து சாய்ந்துள்ளதால், புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வழிதெரியாமல் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சேதமடைந்துள்ள வழிகாட்டிப் பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.திருக்குமரன், சித்தாமூர்.