Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

ADDED : ஜூலை 09, 2024 11:20 PM


Google News
செங்கல்பட்டு:கொளத்துார் கிராமத்தில், இன்று மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சிகளில் மனுநீதிநாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள கொளத்துாரில், இன்று காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us