Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : ஜூலை 17, 2024 01:08 AM


Google News
செங்கல்பட்டு, தமிழகத்தில், வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு, சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வாயிலாக, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு, கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு தேர்வு செய்வோருக்கு பதக்கத்துடன், 5 லட்ச ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ் சுதந்திர தின விழாவில்முதல்வர் வழங்குவார்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை பெண்கள், http://www.awards.tn.gov.in/- என்ற இணையதளபக்கத்தில், வரும் 18ம் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்கள் பெற, கலெக்டர் அலுவகத்தில், நான்காவது தளத்தில், பி பிளாக்கில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us