Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

ADDED : ஜூன் 21, 2024 10:16 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார், 34. ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி, சுகன்யா, 28, என்ற மனைவியும், பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம், சுகன்யா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், பாபு என்ற நபர் உள்ளாரா என கேட்டு பேச்சு கொடுத்துள்ளார்.

சுகன்யா, அதுபோல யாரும் இல்லை என கூறவும், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். சுகன்யா தண்ணீர் எடுக்க வீட்டுக்கு உள்ளே சென்றபோது, அவரும் உள்நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி, 4 கிராம் தங்கக் கம்மலை பறித்துக் கொண்டார்.

ஆனால், பீரோவை திறக்கச்சொல்லி மீண்டும் மிரட்டியுள்ளார். ஆனால், சுகன்யா கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் குறித்து, பாலகுமார் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us